Monday, June 27, 2011

Anbe Vaa-naan parthathile…..

 

 

 

நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன்
ஒரு கவிதையென்பேன்
எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
(நான் பார்த்ததிலே)


இடையோ இல்லை இருந்தால் -
முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை வருவதினாலே
நிலவோ மலரோ எதுவோ
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள்தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள்
இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ

No comments:

Post a Comment