Monday, June 27, 2011

Enga Veetu Pillai –naan anaittal…..

 

 

Technorati Tags: ,

 

நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)

Anbe Vaa-naan parthathile…..

 

 

 

நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன்
ஒரு கவிதையென்பேன்
எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
(நான் பார்த்ததிலே)


இடையோ இல்லை இருந்தால் -
முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை வருவதினாலே
நிலவோ மலரோ எதுவோ
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள்தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள்
இன்று கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ